உற்றுயிர்த்துத் தேடலாகி-விஜயராணி ஐ.ஏ.எஸ்

உற்றுயிர்த்துத் தேடலாகி-விஜயராணி ஐ.ஏ.எஸ்

‘காதல் ‘ ஒரு அழகான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அரும்பும் அழகான புரிதல்,நேசம்…எத்தனையோ பேரைக் சந்திக்கிறோம்,எத்தனையோ பேரைக் கடக்கிறோம்.ஆனால் எவரோ ஒருவரிடத்தில் தோன்றும்… வளரும்… இந்த அழகான நேசம் எல்லாமே பொதுவாய் நான்கு முடிவுகளுக்குள் கட்டுப்பட்டு விடும்.இனிதாய் இருவரும் கைகோர்த்து வாழ்க்கையை வாழக்கூடும் அல்லது இருவரைச் சார்ந்த உறவுகளின் பொருட்டு நேசம் மரித்துப் போக தாங்கள் எங்கோ வழக்கூடும் அல்லது இருவரில் ஒருவர் தங்களை சிறைபடுத்தும் சம்பிரதாய அலங்காரங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க மனதை மரணிக்க வைத்து பிரிந்து வழக்கூடும் அல்லது நேசத்தை வாழ வைப்பதாய் சொல்லிவிட்டு,தங்கள் மரணித்து போகக்கூடும்,இப்படித்தான் கிடக்கிறது காலம்கலமாய் இந்த காதல்,இதைப் பற்றி துளித்துளியாய் கவிதை வடிவில்,என்னை கடந்த,நான் கடந்த,கண்ட,கேட்டவற்றை உணர்ந்தவற்றை கவிதைகளாய் எழுத முயன்றிருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *